• Breaking News

    Monday, April 13, 2015

    மஹிந்தவை பார்வையிட தயாராகும், சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள்..!









    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பார்க்கச் செல்லவுள்ளனர்.
    எதிர்வரும் 16ம் திகதி மஹிந்தவை பார்ப்பதற்காக, குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு செல்லவுள்ளனர்.



    சிங்கள புத்தாண்டு கொண்டாட்ட மரபுகளில் ஒன்றாக உறவினர்களை பார்வையிடச் செல்லும் மரபு காணப்படுகின்றது. புத்தாண்டு காலப்பகுதியில் உறவினர்கள் வீடுகளுக்குச் செல்வதனை சிங்கள மக்கள் ஒர் வழக்கமாக கொண்டுள்ளனர்.



    அந்த அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மஹிந்தவின் வீட்டுக்கு எதிர்வரும் 16ம் திகதி செல்லவுள்ளனர்.



    டலஸ் அழப்பெரும, பந்துல குணவர்தன, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்தன, எஸ்.எம்.சந்திரசேன, சாலிந்த திஸாநாயக்க, டி.பி. ஏக்கநாயக்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வீரகுமார திஸாநாயக்க, ரோஹித்த அபேகுணவர்தன, விதுர விக்ரமநாயக்க, ரஞ்சித் டி சொய்சா, ரொசான் ரணசிங்க, ஜனக வக்கும்புர, உதித லொக்குபண்டார, லொஹான் ரத்வத்த, சரண குணவர்தன, கீதாஞ்சன குணவர்தன, திலும் அமுனுகம, மனுஸ நாணயக்கார, ஸெஹான் சேமசிங்க, லக்ஸ்மன் வசந்த பெரேரா, மாலனி பொன்சோக, வை.ஜீ.பத்மசிறி, சரத் வீரசேகர, சிறியானி விஜேவிக்ரம உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதியை பார்வையிட தங்காலைக்கு செல்லவுள்ளனர்.



    மேலும், மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட மாகாணசபை உறுப்பினர்களும் இவ்வாறு தங்காலை சென்று முன்னாள் ஜனாதிபதியை பார்வையிடவுள்ளனர்.

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel